×

விக்கிரமங்கலம் அருகே வாக்குவாதம் முற்றியதில் தகராறு நண்பரை தாக்கிய வாலிபர் கைது

தா.பழூர், பிப் .22:விக்கிரமங்கலம் அருகே வாக்குவாதம் முற்றியதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வடக்கு நரியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (25). நண்பர்களான இருவரும் வடக்கு நரியங்குழி மாரியம்மன் கோயில் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜ்குமாருக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசன் ராஜ்குமாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராஜ்குமாரின் தாய் சாந்தி விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ லோகநாதன் வழக்குப்பதிந்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Wickramangala ,
× RELATED விக்கிரமங்கலம் அரசு...