×

கணபதிபுரம் ஊராட்சியில் இரு குடும்பத்தாரிடையே தகராறு: 2 பேர் காயம்

கந்தர்வகோட்டை, பிப்.17: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட கணபதிபுரம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் ரெங்கசாமி மனைவி ஜெயலட்சுமி (48) மற்றும் கோகுல வாசன் மனைவி அருள்ஜெயமலர் (43). இரு குடும்பத்திற்கும் இடையே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தை யார் கையகப்படுத்துவது என நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறின்போது அருள்ஜெயமலரின் கணவர் கோகுலவாசன்(50) என்பவருக்கும், ரங்கசாமி மனைவி ஜெயலட்சுமி(48) ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கோகுலவாசன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், ஜெயலட்சுமி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருதரப்பு புகாரின்பேரில் ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து ரெங்கசாமி மகன் ஜெயபால் (31) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Ganapathipuram ,
× RELATED குமரி அருகே கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு..!!