×

தேர்தல் நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இன்று (17ம்தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான வரும் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ம் தேதியன்றும், தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்யவோ, அல்லது மதுபானங்கள் வாகனங்கள் மூலம் இடம்பெயர்வு செய்யவோ கூடாது. இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும், அவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Tasmag ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு...