×

தர்மபுரி நகராட்சி 30வது வார்டில் விசிக வேட்பாளர் தீவிர பிரசாரம்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி நகராட்சி 30வது வார்டில், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜயலட்சுமி போட்டியிடுகிறார். இவருக்கான தேர்தல் அலுவலகம் நேற்று அம்பேத்கர் காலனியில் திறக்கப்பட்டது.
தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், விஜயலட்சுமிக்கு ஒதுக்கப்பட்ட தென்னைமரம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில், அம்பேத்கர் காலனி, அமுதம் காலனி, அந்தோணி காலனி, இபி காலனி, பிஎஸ்என்எல் ஊழியர் குவாட்டர்ஸ் உள்ளிட்ட இடங்களில் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில்இ துணை செயலாளர் மின்னல் சக்தி, செய்தி தொடர்பாளர் பாண்டியன், குண்டு சக்தி, உமா சங்கர், ஜெகநாதன், தசிவாடி ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக பொறியாளரணி துணை அமைப்பாளருமான இன்ஜினியர் ஆறுமுகம், கவுதம், ஜெயபால், பிரபு, வெங்கடாஜலபதி, சின்ராஜ், சக்திவேல், துரைராஜ், கோவிந்தராஜ், விசிக நிர்வாகிகள் கார்த்திக், வெற்றிச்செல்வன், சோனா, ரஞ்சித், மூர்த்தி, சதீஸ், சிலம்பம், இளவரசன், முத்து மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : Vizika ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி