ஈரோடு, பிப். 12: கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வருதல், சிறப்பு பூஜைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இதைத்தொடர்ந்து, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.