×

அரூர் அருகே போலீஸ்காரர் வீட்டில் 5.5 பவுன் நகை திருட்டு

தர்மபுரி, பிப். 11: அரூர் அருகே போலீஸ்காரர் வீட்டில் பீரோவை உடைத்து 5.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. அரூர் அடுத்த போடம்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் நாகராஜ்(33). இவர் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாக, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நாகராஜ் குடும்பத்துடன் உடுமலைப்பேட்டையில் வசிக்கிறார். போடம்பட்டியில் உள்ள வீட்டில் அவரது தந்தை பழனிசாமி, தாய் சித்தம்மாள் ஆகியோர் வசிக்கின்றனர். இந்நிலையில் சித்தம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, மொரப்பூரில் உள்ள மகள் வீட்டிற்கு பழனிச்சாமியுடன் சென்று விட்டார்.
இதனிடையே, நேற்று முன்தினம், இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 5.5 பவுன் நகை திருடு போயிருந்தது.  இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arur ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி