×

அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மக்களோடு மாமன்ற உறுப்பினர் திட்டம்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் கண்ணம்மாபேட்டையில் உள்ள கார்பரேஷன் காலனியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கண்ணம்மாபேட்டை தகன மேடையில் புகை போக்கி குழல் பராமரிக்கப்பட வேண்டும், சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், தெரு நாய்கள் பராமரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.நான் வெற்றி பெற்றவுடன் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன், என ராஜா அன்பழகன் உறுதியளித்தார். மேலும், ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வித்தரம் மேம்பட இலவச கணினி பயிற்சி மையம் அமைப்பேன், காரிய மண்டபம், உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு திடல், சிசிடிவி கேமராக்கள் அமைப்பேன்.

மேலும், ‘‘மக்களோடு மாமன்ற உறுப்பினர்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும், என்றார். கோ.உதயசூரியன், பி.மாரி வட்ட கழக செயலாளர்கள் எஸ்.லட்சுமிகாந்தன், வி.கே.மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி ஜெ.ஜானகிராமன், இரா.கர்ணா, வழக்கறிஞர் ஜெயவேல், லயன் சக்திவேல் மற்றும் திமுக முன்னோடிகள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், செயல்வீரர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.


Tags : DMK ,Raja Anpalagan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி