கடலூர், பிப். 10: ரத சப்தமியையொட்டி நேற்று முன்தினம் கடலூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் சாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் எழுந்தருளினார். அங்கு சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து சாமி கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைப்போல கடலூர் வண்டிப்பாளையம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சாமிக்கும் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த தீர்த்தவாரி நடைபெறவில்லை. இந்நிலையில் இந்தாண்டு பக்தர்கள் யாரும் இன்றி தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.