×

பட்டதாரி பெண் மாயம்


தர்மபுரி, பிப்.10: தர்மபரி அடுத்த மகேந்திரமங்கலம் மார்வாடி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் மகள் முல்லைகொடி(22). இவர், பிஎஸ்சி, பிஎட் படித்து விட்டு, வீட்டில் இருந்தார். முல்லைகொடிக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி திடீரென முல்லைக்ெகாடி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முல்லைக்கொடியின் தந்தை மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முல்லைக்கொடியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா