×

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது

திருப்பூர், பிப். 10: திருப்பூர், மங்கலம் போலீசார் பல்லடம்-மங்கலம் சாலையில் நேற்று வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முண்ணுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவை சேர்ந்த முனியாண்டி (19), மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் தாலுகாவை சேர்ந்த பிரவீன் குமார் (எ) சியான் (22), கோவை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த ஜனவரி 19ம் தேதியன்று மங்கலத்தை அடுத்துள்ள பொத்தாம்பூச்சிபாளையத்தில் அரவிந்த் (18) என்பவரை வழிமறித்து பணம், செல்போன், பைக்கை வழிப்பறி செய்ததும், பல்லடம் பகுதியை சேர்ந்த லட்சுமன் (26) என்பவரிடம் செல்போன் வழிப்பறி செய்ததும், தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags :
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 32,258 மாணவர்கள் பயன்