×

புளியங்குடியில் போலீசார் கொடி அணிவகுப்பு

புளியங்குடி,பிப்.10:  நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் தலைமையில் புளியங்குடி முக்கிய வீதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருப்பதை யொட்டி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தவும், நூறு சதவீதம் வாக்களிக்க கோரியும் புளியங்குடியில் போலீசாரின் கொடிஅணிவகுப்பு நடந்தது. டிஎஸ்பி கணேஷ் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பு புளியங்குடி எம்ஜிஆர் சிலை அருகில் தொடங்கி மெயின் ரோடு வழியாக பள்ளிவாசல் பகுதிக்கு சென்று நகராட்சி அலுவலகம் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. இதில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜராம், எஸ்ஐ பரத்லிங்கம் மற்றும் புளியங்குடி உட்கோட்டத்தை சேர்ந்த வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.


Tags : Puliyangudi ,
× RELATED தென்காசியில் காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்து: 6 பேர் பலி