×

நாமகிரிப்பேட்டையில் ஒரேநாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நேற்று ஒரேநாளில் 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது.

நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட 17 பேரும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவர் என 18 பேரும் தங்களது வேட்புமனுவை  நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜா, பிரபு ஆகியோரிடம் நேற்று தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் பொன்னுசாமி எம்எல்ஏ, நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமசுவாமி, பேரூர் செயலாளர் அன்பழகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Namagiripettai ,
× RELATED நாமகிரிப்பேட்டை அருகே பரபரப்பு...