×

தொண்டியை தாலுகாவாக அறிவிக்க மக்கள் வலியுறுத்தல்

தொண்டி:  தொண்டியை மையமாக வைத்து ஏராளமான கிராமங்கள் உள்ளது. அரசின் அனைத்து தேவைக்கும் பல கிலோ மீட்டர் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் தொண்டியை தனி தாலுகாவாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டியை சுற்றிலும் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளது. காரங்காடு, முள்ளிமுனை, எஸ்.பி.பட்டினம் வரையிலும் கடற்கரை பகுதியாகும். இப்பகுதி மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது உள்ளிட்ட அனைத்து அரசு பணிக்கும் நீண்ட தூரம் உள்ள திருவாடானைக்கு செல்ல வேண்டியுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திருவாடானை தாலுகாவில் இருந்த ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை தனி தாலுகாவாக அறிவித்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக உள்ளது. இதேபோல் தொண்டியை தனி தாலுகாவாக அறிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Tondi ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்