×

கொலையாளி குண்டாசில் கைது

சிவகங்கை: சிவகங்கையில் மருத்துவ மாணவர்களை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.  கடந்த ஜூலை 25ல் தங்களது வயலில் மது அருந்தியது குறித்து கேட்ட மருத்துவ மாணவர்களான சகோதரர்கள் ஜோசப்சேவியர்(25), கிரிஸ்டோபர்(20) இருவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆனந்தன்(எ)வாகைக்குடி ஆனந்தன் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி செந்தில்குமார், கலெக்டர் மதுசூதன்ரெட்டிக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ஆனந்தன்(எ)வாகைக்குடி ஆனந்தனை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags : Kunda ,
× RELATED குந்தா சுற்று வட்டார பகுதியில்...