×

கலெக்டரிடம் புகார்

 

தேனி, மே 8: தேனி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக பொறுப்பாளர் தலித்ராயன், தமிழ்புலிகள்கட்சி பொறுப்பாளர்கள் கார்த்திக், அருண், ஆசைவள்ளுவன் ஆகியோர் கலெக்டர் ஷஜீவனாவிடம் அளித்த புகார் மனுவில், தேனி அருகே உள்ள மாணிக்காபுரத்தை சேர்ந்த மூன்று குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும், ஊர் திருவிழாவிற்கு வரிவாங்க மறுத்தும், சுடுகாட்டில் பிணத்தை புதைக்கக் கூடாது.

தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என ஊர்பஞ்சாயத்து பேசி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள 3 குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இம்மூன்று குடும்பத்தினரையும் மீண்டும் இக்கிராமத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Dravidar Liberation Organization ,Dalitrayan ,Tamil Tiger Party ,Karthik ,Arun ,Asaivalluvan ,Shajeevana ,Manikkapuram ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை