×

கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் மார்கழி மாத மண்டகப்படி

கந்தர்வகோட்டை, ஜன. 5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று மார்கழி மாத மண்டகப்படி நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு எண்ணெய் காப்பு செய்து திருமஞ்சன பொடியில் அபிஷேகம் செய்து பச்சரிசிமாவு, சந்தனம், மஞ்சள், இளநீர் நாட்டுச்சர்க்கரை, பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் அம்மனுக்கு உகந்த பொருட்களால் அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று பிரசாதமாக மிளகு பொங்கல் பெற்று சென்றனர். அபிஷேக ஆராதனையை கோயில் குருக்கள் சுரேஷ் செய்திருந்தார்.

Tags : Markazhi ,Kandarvakottai Muthumariamman Temple ,
× RELATED சதுரகிரி சுந்தர மகாலிங்கம்...