×

திருமானூரில் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம்

அரியலூர்,ஜன.5: அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி திருமேனி தலைமை வகித்து, மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார இழப்பு, மரியாதை குறைவு, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து, அங்கிருந்த வினாடி-வினா நடத்தப்பட்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர் கண்ணகி மற்றும் காவல்துறையினர், ஆட்டோ ஒட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Thirumanur ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி