×

விவசாயிகள் பயிற்சி முகாம்

காரியாபட்டி: காரியாபட்டி வட்டார விவசாயிகளுக்காக பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு காரியாபட்டி விவசாய அலுவலர் முருகேசன் தலைமையில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் வாசுகி, வினிதா, சுஜிதா, வைஷ்ணவி, ஜெய்த்தூன்சமீகா, முபிதா, வர்ஷினி ஆகியோர் கொண்ட குழுவினர் தேசிய விவசாய வளர்ச்சி நிரல் திட்டத்தின் கீழ் திரவ உயிர் உரங்களை வழங்கி நன்மை தீமைகள் பற்றி விளக்கிக் கூறினர்.

வேளாண்மை அலுவலர் முருகேசன் மாணவிகள் தங்களது வேளாண்மை இளங்கலைப் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக கிராம தங்கல் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும், கிராமங்கள் தோறும் சென்று தங்களது களப்பணி நடைமுறை பயிற்சிகளை மேற்கொண்டு விவசாய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் வந்துள்ளனர் எனக் கூறினார்.

Tags : Farmers Training Camp ,
× RELATED திருக்கழுக்குன்றத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்