×

கடலூர் அருகே தூக்கில் கல்லூரி மாணவி சடலம்

கடலூர், ஜன. 3: கடலூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள தி.புதூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் சுபாஷினி (19). இவர் தேவனாம்பட்டினம் அரசு கலை கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற சுபாஷினி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சுபாஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சுபாஷினி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lupil College ,Kadalore ,
× RELATED மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடலூருக்கு பணியிட மாற்றம்