×

திட்டக்குடியில் மனுக்கள் பெறும் முகாம்


திட்டக்குடி. டிச. 31: விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர், ஆகிய தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு மனுக்களை பெறும் முகாம் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். 213 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை உடனே வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், திட்டக்குடி தாசில்தார் தமிழ்செல்வி, சமூக நல பாதுகாப்பு தாசில்தார்கள் திட்டக்குடி ரவிச்சந்திரன், விருத்தாசலம் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tittakkudi ,
× RELATED திட்டக்குடி அருகே ஆவணம் இன்றி பைக்கில் எடுத்து சென்ற ₹1.75 லட்சம் பறிமுதல்