×

செந்துறை அருகே கோயில் குருக்கள் வீடி இடிந்து சேதம்


செந்துறை,டிச.31: அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள புகழ்பெற்ற சிவதாண்டேஸ்வரர் ஆலயத்தின் குருக்களாக பணியாற்றுபவர் உமாபதி குருக்கள் (56). இவரது வீடு அருகில் உள்ள இலங்கைசேரி கிராமத்தில் உள்ளது. இந்நிலையில் உமாபதி குருக்கள் அவரது மனைவி மற்றும் பாட்டிகள் நவமணி, ஜானகி ஆகியோர்களோடு தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென சப்தம் கேட்க்க அனைவருவரும் திடுகிட்டு எழுந்தனர். அப்போது வீட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சுவர் முழுவதும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனே வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விசாரணை செய்ததில் கடந்த வடகிழக்கு பருவமழையில் பலவீனமடைந்த மண் சுவர் பிளவு ஏற்பட்டு இருந்ததாககவும், நள்ளிரவில் இடிந்தபோது சுவர் வெளிப்பக்கமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். மழை இல்லாதபோது சுவர் இடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Sendurai ,
× RELATED செந்துறை அருகே நடந்த மாநில கபடி...