×

அவிநாசி அருகே ஆர்ப்பாட்டம்

அவிநாசி, டிச. 28:  அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசி அருகே பொங்குபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், இரண்டாவது  திட்டக்குடிநீரை வாரத்திற்கு இரண்டு முறை வழங்க வேண்டும் .தினசரி ஊராட்சிக்கு வழங்க வேண்டிய இரண்டுலட்சத்து 30 ஆயிரம் லிட்டர் 3-வது திட்ட பவானி ஆற்றுக் குடிநீரை எல்.அன்.டி. நிறுவனத்திடமிருந்து முழுமையாகப்பெற்று ஊராட்சி முழுவதும் வழங்க வேண்டும்.

புதியதாக குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் துணை தலைவர் அப்புசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாவட்ட செயலாளர் முத்துக் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், கிளை செயலாளர் விஸ்வநாதன். வழக்கறிஞர் மணவாளன், முன்னாள்.ஊராட்சி மன்ற உறுப்பினர் வேலுசாமி உள்பட்ட பலர் பங்கேற்று பேசினர்.

Tags : Avinashi ,
× RELATED கோவை அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றும் பணி