×

திருப்பூரில் நாளை நடக்கிறது அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை சார்பில் நலத்திட்ட உதவி

திருப்பூர், டிச. 25:  திருப்பூரில் அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை சார்பில் நாளை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேசிய தலைவர் விஜய் குப்தா பங்கேற்கிறார். அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை சார்பில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், கண் பரிசோதனை முகாம் திருப்பூர் காங்கேயம் ரோடு காயத்ரி மஹாலில்  நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவையின் மாநில தலைவர் (தமிழ்நாடு) ஆர்.ஆர்.முத்தையன் தலைமை வகிக்கிறார்.

மாநில பொதுச்செயலாளர் வலம்புரி (எ) சுரேஷ் முன்னிலை வகிக்கிறார். இதில் தேசிய தலைவர் விஜய் குப்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார். காலை 9 மணிக்கு மருத்துவ முகாமும், மாலை 5 மணிக்கு நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கமிட்டி மற்றும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவையின் மாநில தலைவர் ஆர்.ஆர்.முத்தையன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : Tiruppur ,India ,Priyanka Rakulkandi ,Councilaid ,
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...