×

சென்னை எம்ஜிஆர் நினைவிடத்தில் அய்யாத்துரை பாண்டியன் மரியாதை

சங்கரன்கோவில், டிச. 25: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்காசி வடக்கு மாவட்ட அமமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  இதில் மாவட்ட அவைத்தலைவர் (பொறுப்பு) ஹைதர் அலி,  ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பாலமுருகன், சசிகுமார், நகர செயலாளர் முப்பிடாதி,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் (பொறுப்பு) மூக்கையா,  சிறுபான்மையின அணி செயலாளர் (பொறுப்பு) ரெஸ்கல்லா, இளைஞர் பாசறை  செயலாளர் (பொறுப்பு) கணேசன், ஒன்றிய துணை செயலாளர் கணேசன்,  நகர எம்ஜிஆர்  மன்ற செயலாளர் அரிச்சந்திரன், நகர அவைத்தலைவர் முத்துவேல்,  கனகசபாபதி, அன்பரசன்,  நகர துணை செயலாளர் நல்லசாமி என்ற மணி, வர்த்தக  அணி செயலாளர் செந்தில், வார்டு செயலாளர்கள் குருநாதன், மாரிமுத்து, ஊராட்சி செயலாளர் பசும்பொன், தில்லை பேச்சிமுத்து மற்றும்  நிர்வாகிகள் மாரியப்பன், வக்கீல் சவுந்தரபாண்டியன், நல்லபிள்ளை, பாலா, குணா, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Ayyathurai Pandian ,MGR Memorial ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...