×

ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள்

ஈரோடு, டிச.24: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 2ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. இதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நெல் அரவை செய்து, அரிசியாக மாற்றப்பட்டு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Erode ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...