×

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவி பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது

சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், எனது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். சூளைமேடு வன்னியர் தெருவை சேர்ந்த கோகுல் (20) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் எனது மகளிடம் பழகியுள்ளார்.

அப்போது, எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி, அவளது செல்போன் எண்ணை பெற்று பேசி வந்துள்ளார். பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கோகுல் வந்து எனது மகளிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் எனது மகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Tags : Instagram ,Pokcho ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்