×

ஜெயங்கொண்டம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து பணம், நகை, ஆவணங்கள் எரிந்து நாசம்

ஜெயங்கொண்டம், டிச.22: ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் சிவன் கோயில் அருகே ஆழ்வார் மகன் செந்தாமரைக் கண்ணன் (52)கூலி தொழிலாளி, நேற்று இரவு எதிர்பாராத விதமாக மின்கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

தீ விபத்தால் செந்தாமரைக்கண்ணனின் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, 75 ஆயிரம் பணம் மற்றும் நில பத்திரங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் கட்டில் மிக்சி கிரைண்டர் மற்றும் சமையல் பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Jayankondam ,
× RELATED பெரம்பலூர் /அரியலூர் வீராக்கன்...