×

சுயமரியாதை வழியில் நடந்து சமூக நீதிக்காக வாழ்ந்துவரும், தன்மானத்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாழ்க்கை குறிப்பு

இன்று பிறந்தநாள் காணும் தன்மானத்தலைவர் ஈ.வி.கே.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கக்கூடிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரன். ஈ.வே.கி.சம்பத்,சுலோச்சனா சம்பத் தம்பதியருக்கு மகன். இவருக்கு வரலட்சுமி என்கிற துணைவியாரும், திருமகன் ஈ.வெ.ரா, சஞ்சய் சம்பத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பகால கல்வியை ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்திலும், ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் படித்தார்.மேற்படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் காலத்தில்  காங்கிரஸ் மாணவரணி செயலாளராக இருந்தார். அதனைதொடர்ந்து ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். ஈரோடு நகர காங்கிரஸ் தலைவராகவும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். தமிழக காங்கிரசின் மாநில பொதுசெயலாளர் பதவியையும் அவர் வகித்தார்.

2000ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை முதல் தடவையாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார்.2003 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தார். இரண்டாவது முறையாக 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்தார்.

1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 -ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார். 30ஆண்டுகளுக்கும் மேலாக ஐஎன்டியூசி அமைப்பில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். என்றென்றும் காங்கிரஸ் கட்சிக்கு நாளும் விசுவாசமாக உழைத்து வருபவர். கட்சித் தலைமைக்கு எதிராகவும், தொண்டர்களுக்கு எதிராகவும் யாராவது செயல்பட்டால் வெகுண்டெழுந்து விடுவார். எனக்கு முதலில் தன்மானம் தான் முக்கியம் அதற்குப் பின்னால்தான் மற்றவை என அடிக்கடி கூறுவார். அதை சொல்வதோடு நிறுத்தி விடாமல் தேவைப்படும் நேரத்தில் நேரில் களத்தில் இறங்கியும் இருக்கிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும். எந்த தலைவர் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பதும், சுட்டிக் காட்டுவதும் அவருக்கு நிகர் அவர் தான்.

இவர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காலங்களில் அவர் என்ன பேசுகிறார் என்பதை தமிழக மக்களும் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர்களும் உன்னிப்பாக கவனிப்பார்கள். பதவிக்காகவும், பணத்திற்காகவும் எதையும் செய்யாமல் நேர்மையுடன் இன்றும் தனது சொந்த பணத்திலேயே அரசியல் செய்கிறார். தந்தை பெரியார் மக்களுக்காக தனது சொத்தை தானமாக தந்தார், அவரது பேரன் இளங்கோவன் மக்களுக்காக சொத்தை விற்று அரசியல் செய்து வருகிறார். மனதில் பட்ட கருத்தை துணிச்சலுடன் கூறும் தலைவர்களில் முக்கியமாக இருப்பவர்.
இதற்கு அவர் பல்வேறு தர்ம சங்கடங்களை சந்திக்க நேரிட்டது ஆனால் அதைப்பற்றி அவர் துளிக் கூட கவலைப்பட்டதில்லை.   சாதாரண அடிமட்ட தொண்டர்களையும் மதிக்கும் பண்பு அவரிடம் இயல்பாகவே இருந்து வந்துள்ளது. அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர். தன்னை மிகவும் எளிமையாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்.நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

இடைவிடாத பணிகள் அதிகம் இருந்தாலும் அந்த பணிகளுக்கு இடையே நண்பர்களை சந்தித்து அவர்களுடன் பொழுதை போக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு உண்டு. சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு வரும் போதெல்லாம் இங்கு உள்ள நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடன் பொழுதை கழிப்பார். மனதில் பட்ட கருத்தை துணிச்சலுடன் சொல்லும் தலைவர் இளங்கோவன். மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு சென் வாட் வரியை நீக்கி ஜவுளி தொழிலை சார்ந்தவர்களுக்கு பேருதவி செய்துள்ளார். இதேபோல் பல்வேறு சாதனைகளை அமைச்சராக இருந்தபோது செய்து சாதனை படைத்துள்ளார்.

Tags : EVKS Ilangovan ,
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...