×

திமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகிகள்

அந்தியூர், டிச. 21: அந்தியூரில் திமுக எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் முன்னிலையில், அந்தியூர் தேமுதிக நகர செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜேஷ், வார்டு கழக செயலாளர்கள் மக்கள் பாலகிருஷ்ணன், முருகன்  மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன், கோவிந்தராஜ், சாதிக், சிவகுமார், சின்னசாமி, சேக்தாவூத், ரசூல், நாசர், கணேசன், கார்த்திக், மூங்கில்பட்டி அருண் ஆகியோர் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்தவர்களுக்கு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் திமுக கட்சி துண்டு போர்த்தி  வாழ்த்து தெரிவித்தார். மேலும் அப்போது பேரூர் கழக பொறுப்பாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் பழனிச்சாமி, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சன்ரைஸ் சிவகுமார் உள்ளிட்டோர் திமுகவினர் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Temujin ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி