×

18 சித்தர்கள் வழிபாடு

ராஜபாளையம், டிச. 18: ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பதினெட்டு சித்தர்கள் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டது. ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள சர்ச் தெருவில் உள்ள மாரியம்மன் கோயிலில் பதினெட்டு சித்தர்கள் வழிபாடு நடத்தப்பட்டது. கோயில் விழா கமிட்டி தலைவர் அபிமன்யூ தலைமையில் சிவலிங்கத்திற்கு வழிபாடு நடத்தப்பட்டு பதினெட்டு சித்தர்களுக்கு வஸ்திரதானம் போன்றவை வழங்கப்பட்டது. பின்னர் பதினெட்டு சித்தர்களுடன் ஊர்வலமாக பழைய பஸ்நிலையம், மதுரை சாலை வழியாக வந்து கோயிலை வந்தடைந்தது. அங்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராஜபாளையம் பன்னிருதிருமுறை மன்ற ஆன்மீக அடியார்கள் ஞானகுரு ஓதுவார் சாமி தலைமையில் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டு வழிபாட்டு முறைகளை நடத்தி வைத்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.

Tags : Siddhartha ,
× RELATED மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியை சொல்லிக் கொடுங்கள்!