×

மன்னம்பந்தலில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

மயிலாடுதுறை, டிச.17: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் ஏழை எளிய மக்களின் பயன்பெறும் வகையில் சலுகை விலையில் மருந்துகளை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் மன்னம்பந்தலில் புதிதாக கூட்டுறவு மருந்தகம் நேற்று திறக்கப்பட்டது. தொடக்க விழாவில் மயிலாடுதுறை டிஆர்ஓ முருகதாஸ் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல்விற்பனையை தொடங்கி,வைத்தனர். இதில் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காவிரிபூம்பட்டினத்திலும் புதிய மருந்தகம் திறக்கப்பட்டது.

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த குரவப்புலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வேதரெத்தினம் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் முகமதுநாசர், கூட்டுறவு சார்பதிவாளா் முத்துராஜா, குரவப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், துணை தலைவர் ராமசுப்பு, கத்தரிப்புலம் ஊராட்சி தலைவர் வீரமணி, கத்தரிபுலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அன்புகரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mannambandal ,
× RELATED மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா...