×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு: இன்று கடைசி நாள்

செங்கல்பட்டு: கலெக்டர்கள் செங்கல்பட்டு ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு, சமூக நலத் துறை சார்பில் 2021 - 22ம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது, தமிழக முதல்வரால், உலக மகளிர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சமூக நலன், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்று வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கையுடன் கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்து, 2 நகல் மற்றும் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். இதனை, இன்று (17ம் தேதி) மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். செங்கல்பட்டில், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலகம், (மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம், செங்கல்பட்டு) என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட. சமூக நல அலுவலகம், (கலெக்டர் அலுவலக வளாகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடம் முதல் தளம்) காஞ்சிபுரம் என்ற முகவரியில் நேரில் சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Kanchi Districts ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...