×

இன்று காலை நடக்கிறது ஆண்டாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

திருவில்லிபுத்தூர், டிச. 16: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை பொருத்தவரை, மார்கழி மாதம் எந்த நேரத்தில் பிறக்கிறதோஅந்த நேரத்தில் மார்கழி மாதத்திற்குரிய சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று காலை காலை 9.20 மணிக்கு மார்கழி மாதம் பிறக்கிறது. இதைத்தொடர்ந்து ஆண்டாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பூஜையின்போது ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் கூறுகையில், இன்று மார்கழி மாதம் பிறப்பதால் காலை 9.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். நாளையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ஆண்டாள் கோயிலிலும், பெரிய பெருமாள் சன்னதியிலும் நாலரை மணி முதல் பக்தர்கள் மார்கழிமாதம் முழுமைக்கும் அதிகாலை வேளைகளில் சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தனர்.

Tags : Markazhi ,Andal temple ,
× RELATED குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்