×

கழுகுமலையில் முன்னாள் கூட்டுறவு வங்கி செயலர் வீட்டில் கொள்ளை முயற்சி

கழுகுமலை.டிச.11: கழுகுமலை ஏபிசி நகரை சேர்ந்தவர் சுப்பையா (60). இவர் கழுகுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களது மகன் வைரமுத்து, சென்aனையில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் வேலை பார்த்து வருகிறார். மகள் கார்த்திகா ஆந்திராவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு திருப்பதியில் கடந்த 8-ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக சுப்பையாவும், ராமலட்சுமியும் கடந்த 4ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருப்பதி புறப்பட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று சுப்பையா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, சுப்பையாவும், அவரது மனைவியும் ஊர் திரும்பினர். போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூபாய் எதுவும் வைக்காததால் திருடர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது. இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்