×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முதியோர் இல்லத்தில் அன்னதானம்

காரைக்குடி, டிச.10: மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் திட்டமிட்டு அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என முன்னாள் அமைச்சர் தென்னவன் தெரிவித்தார்.காரைக்குடியில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஊரவயல்செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், நகர செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தென்னவன் துவக்கி வைத்து பேசுகையில், ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாராட்டி உள்ளார். மக்களுக்கு திட்டங்களை அறிவிப்பது முதல் அது சரியாக மக்களை சென்றடைகிறதா என ஆய்வு செய்வது வரை தொடர்ந்து கண்காணிப்பு செய்து மக்கள் பணியாற்றி வருகிறார். இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என பெயர் பெற்றுள்ளார். சிறந்த மக்கள் ஆட்சிக்கு முதல்வரின் சாதனைகளே சாட்சியாக உள்ளது என்றார்.நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் சன் சுப்பையா, நிர்வாகி துரைநாகராஜ், நகர மாணவரணி அமைப்பாளர் அசரப், முகமதுகனி, அல்போன்ஸ், மகளிர் அணி துணை அமைப்பாளர் சத்யாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Udayanithi Stalin ,Annathanam ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...