×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் புதிய குடிநீர் திட்ட துவக்க விழா, நல உதவிகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்

 

திருப்பூர், பிப்.9: திருப்பூரில் வரும் 11-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் புதிய குடிநீர் திட்ட துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என, திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன் மற்றும் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர், பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.3440 கோடி முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த முதலமைச்சருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிப்பது.

வரும் 11-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் புதிய குடிநீர் திட்ட துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்துவது. இந்தியாவே வியக்கும் வகையில் சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுவது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தலைமைக்கழகம் அறிவிக்கும் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் புதிய குடிநீர் திட்ட துவக்க விழா, நல உதவிகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanithi Stalin ,Tirupur ,DMK ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...