×

ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை அபிஷேகத்துக்கான முன்பதிவு

நாமக்கல், டிச. 10: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை அபிஷேகத்துக்கான முன்பதிவு, வரும் 19ம்தேதி துவங்குகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டு முழுவதும் வடைமாலை அபிஷேகம் நடைபெறுகிறது. கட்டளைதாரர்கள் மூலமே சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு முதல் தினசரி வடைமாலை அபிஷேகத்தில் 5 கட்டளைதாரர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நபருக்கு தலா ₹6 ஆயிரம் வீதம் ₹30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2022ம் ஆண்டுக்கான வடைமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு வரும் 19ம்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: 2021 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு வடைமாலை அபிஷேகத்திற்கான முன்பதிவு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. அபிஷேகத்திற்கு முழு தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முழு தொகையை செலுத்துபவர்களுக்கு மட்டுமே, அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vadamalai Anointing ,Anjaneyar Temple ,
× RELATED செம்பனார்கோயிலில் காற்றுடன் கனமழை பெய்ததால் புளியமரம் சாய்ந்தது