×

கபிஸ்தலம் பகுதியில் பட்டா திருத்தம் சிறப்பு முகாம்

கும்பகோணம்,டிச.10: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் பட்டா திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது. கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியாக சமுத்திரம் கிராமத்தில் நூலக கட்டிடத்தில் தமிழக அரசின் பட்டா திருத்தல் சிறப்பு முகாம் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் வரவேற்று பேசினார். முகாமில் தியாகசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பொதுமக்களிடம் பட்டா திருத்துவது தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் ஒருசில மனுக்களுக்கு உடன் தீரும் காணப்பட்டது. மற்ற மனுக்கள் விரைவில் தீர்வு காணப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் கூறினார். இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான தாமரைச்செல்வன், திருமண்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவப்பிரகாசம், திவ்யா தேவி மற்றும் கிராம உதவியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kapistalam ,
× RELATED கபிஸ்தலம் அருகே மது விற்ற 2 பேர் கைது