×

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 27 பேர் மீது வழக்கு


திண்டுக்கல், டிச.9: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள கல்லூரியில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோதி முருகனுக்கு  மகிளா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கண்டித்து கடந்த 6ம் தேதி நீதிமன்ற வளாகம் முன்பு முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாதர் சங்கத்தினர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி வக்கீல் தெய்வேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது அவரை மாதர் சங்கத்தினர் தாக்க முயன்றதாக கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, ஜானகி, மாதர் சங்கத் தலைவி ராணி, வனஜா, ஆண்டாள் அம்மாள், ஜோதிபாசு, அரபு முகமது உட்பட 27 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நீதிமன்றம் முன்பு அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : MLA ,Balabharati ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...