×

ராமநத்தம் அருகே ஓடையில் பாலம் கட்டி தரக்கோரி கிராம மக்கள் தர்ணா


திட்டக்குடி, டிச. 7:   கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி காட்டுக்கொட்டாய் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொரக்கவாடியிலிருந்து காட்டுக்கொட்டாய் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் ஓடையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது பெய்த மழையினால் ஓடை வழியாக செல்லும் சாலை சேதம் அடைந்து உள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த ஓடையில் பாலம் கட்டி தரக்கோரி ஓடையில் அமர்ந்து தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது கிராவல் மண் அமைத்து சாலை சரி செய்யப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Tarna ,Ramanatham ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...