×

தாளமுத்து நகரில் மக்கள் திடீர் மறியல்

தூத்துக்குடி, டிச. 7: தூத்துக்குடி தாளமுத்துநகர் பாக்கியநாதன் விளை பகுதியில் கடந்த 20 நாட்களாக தேங்கிநிற்கும் மழைநீரை அகற்றகோரி அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நேற்று இரவு திடீரென  மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து விரைந்து வந்த தாளமுத்துநகர் எஸ்ஐ சரண்யா தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசப்படுத்தினர். மேலும் மழை நீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

Tags : Thalamuthu ,
× RELATED சேலத்தில் 22 ஆண்டுக்கு முன் நடந்த கொடூர...