×

கடமலைக்குண்டு பகுதி மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வருசநாடு, டிச. 5: கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் கொடைக்கானலை சேர்ந்த நைல் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவன நிறுவனர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தேனி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கரன், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் குமரேசன், கடமலை மயிலை ஒன்றியம் திமுக செயலாளர் தங்கப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில், மலைவாழ் மக்களுக்கு கம்பளிப் போர்வைகள் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தாழையுத்து, உப்புத்துறை, கடமலைக்குண்டு. கரட்டுப்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags : Katamalaikundu ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மழைக்கு ஒழுகும் அரசு பள்ளி: மாணவ-மாணவிகள் அவதி