×

88 பேருக்கு கொரோனா

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,814பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று மேலும் 25 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து, 589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருதினங்களுக்கு முன் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றும் போலீஸ் எஸ்ஐயின் மனைவி கொரோனாவால் பலியானார். இவருடன் சேர்த்து மாவட்டத்தில் 57பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா