×

சவாரி ஏற்றுவதில் கவனம் ஆட்டோவில் மூன்று பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

குமாரபாளையம், ஏப்.14: குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் காவல்துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எச்சரிக்கை செய்தார். ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது ஓட்டுனரும், பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை ஆட்டோவில் ஏற்றவே கூடாது. 3 நபர்களுக்கு மேல் ஆட்டோவில் ஏற்றக்கூடாது. அடிக்கடி சோப்பால் கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். ஆட்டோவை ஒவ்வொரு பயணத்திற்கு பின்னும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை செய்தார்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி