×

கழுகுமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீயில் எரிந்து நாசம்.

கழுகுமலை,ஏப்.13:கழுகுமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. கழுகுமலை அருகே உள்ள செட்டிகுறிச்சி அடுத்து வடக்கு கோனார் கோட்டையில் இருந்து  தாழையூத்துக்கு வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. லாரியை கழுகுமலை அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து(37) என்பவர் ஓட்டி சென்றார். வடக்கு கோனார் கோட்டை அருகே சென்று கொண்டிருந்த போது லாரி திடீரென எதிர்பாராதவிதமாக தீ பற்றி எரிந்தது. இதையடுத்து கழுகுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறை அதிகாரி கிருஷ்ணசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி மற்றும் வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து மின்வயரில் உரசி வைக்கோல் லாரி தீப்பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kalugumalai ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்