×

அரியலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர்,ஏப்.9: அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று, நேற்று முன்தினம் 17 பேருக்கும், நேற்று 11 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது. இதுவரை அரியலூர் மாவட்டத்தில் 4880 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 4775 பேர் குணமடைந்துள்ளனர், மீதமுள்ளவர்கள் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும், தஞ்சை மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துமனையில் 7 பேரும் பிற மாவட்ட தனியார் மருத்துவமனையில் 11 என 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் பகுதியில் இருவரும், திருமானூரில் மூவரும், தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டத்தில் தலா ஒருவரும், வெளியூரில் இருந்து வந்தவர்கள் 3 பேர் என 11 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், சுகாதார துறையினர் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு சளி மாதிரிகளை சேகரித்துள்ளனர். முன் 19647 பேருக்கு மாதிரிகள் எடுக்கபட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 23,254 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...