×

கடத்தூர் அருகே மண் குவியலால் விபத்து அபாயம்

கடத்தூர், ஏப்.8: கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம், அய்யம்பட்டி, குருபரஅள்ளி, தென்கரைகோட்டை, வகுத்தபட்டி, அரூர் உள்ளிட்ட வழித்தடத்தில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. தாளநத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வரிஅகற்றினர். அந்த மண் சாலையோரத்திலேயே கொட்டப்பட்டுள்ளது. பல மாதங்களாகியும் அதை அகற்றாததால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒருசிலர் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த மண் குவியலை அகற்ற, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadatur ,
× RELATED டூவீலர்கள் மோதிய விபத்தில் விவசாயி பலி