×

பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

தர்மபுரி, ஏப்.8: பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி கிராமத்தில் தென்னை மற்றும் மாந்தோட்டத்தில் தேனீ வளர்ப்பு குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இப்பயிற்சியில், தேனீ வளர்க்க தேவையான முக்கிய தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்துவதற்கான முறைகள், காலநிலைக்கேற்ப தேனீ பாதுக்காக்க வழிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தேனீ வளர்ப்பதன் மூலம் பயிர்களுக்கு மகரந்தச் சேர்க்கை மற்றும் கூடுதல் வருமானம் ஆகிய பயன்பாடுகள் பற்றி அதியமான் வேளாண்மைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் ஏழுமலை மற்றும் கல்லூரி மாணவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர். இப்பயிற்சியில் விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Balakod ,
× RELATED பாலக்கோடு அருகே மின்வேலியில் சிக்கி மக்னா யானை பலி