×

நீலகிரி மாவட்டத்தில் திடீர் நீர் பனி அச்சத்தில் பூங்கா பராமரிப்பாளர்கள்

ஊட்டி, ஏப். 8: நீலகிரி மாவட்டத்தில் தற்போது நீர் பனி விழுவதால், மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் அரசு மற்றும் தனியார் பூங்கா உரிமையாளர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீர் பனி காணப்பட்டது. தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உறைப்பனி காணப்பட்டது. அதன்பின், பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டது. ஒரு சில தினங்கள் மழையும் ெபய்தது. கடந்த சில நாட்களாக பனி மற்றும் மழையின்றி பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. இதனால், ஊட்டியை தவிர மாவட்டத்தின் அனைத்து பகுதிளிலும் சமவெளிப் பகுதிகளை போன்ற புழுக்கம் காணப்பட்டது. இரவு நேரங்களில் கூட குளிர் காணப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நீர் பனி விழுகிறது.

இதில், குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்போது, கோடை சீசனுக்காக பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் நீர் பனி அரசு மற்றும் தனியார் பூங்கா பராமரிப்பாளர்களை அச்சுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஓரிரு தினங்கள் விழுந்த மலர் செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், காய்கறி பயிர்களிலும் நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், இந்த நீர் பனி காரணமாக நேற்று அதிகாலை ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

Tags : Nilgiris district ,
× RELATED சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட நகரின்...