- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டி.ஆர் பாலு
- மத்திய அமைச்சர்
- புது தில்லி
- திமுக பாராளுமன்றக் குழு
- டி.ஆர்.பாலு
- மத்திய சுகாதார அமைச்சர்
- மன்சுக் மந்தாவிய
புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலு நேற்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்தில் இதுவரை நான்கு கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக அரசின் சுகாதார பணியாளர்கள், அதிகாரிகள் இதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 6 லட்சம் தடுப்பூசி வரை போடப்படுகிறது. எனவே, தமிழகத்துக்கு வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.மேலும், எந்த மாநிலத்தில் தடுப்பூசி அதிகமாக போடப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு அதிக தடுப்பூசி வழங்கும்படி கோரியுள்ளேன். மொத்தம் 12 கோடி தடுப்பூசியை ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். வாரம் 50 லட்சம் தடுப்பூசி கிடைத்தால்தான், இந்த இலக்கை அடைய முடியும். கொரோனாவால் இறந்தவர்களுக்கு மாநில அரசுகள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுவது பொறுப்பற்ற பதிலாகும். அதை மறுபரீசீலனை செய்யும் என்று கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்….
The post தமிழகத்துக்கு வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு மனு appeared first on Dinakaran.